Thursday 2nd of May 2024 02:25:07 AM GMT

LANGUAGE - TAMIL
-
அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசியை சிறுவர்களுக்கு செலுத்தி பரிசோதிக்கும் நடவடிக்கை இடைநிறுத்தம்!

அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசியை சிறுவர்களுக்கு செலுத்தி பரிசோதிக்கும் நடவடிக்கை இடைநிறுத்தம்!


ஒக்போர்ட்-அஸ்ட்ராஜெனெகா கோவிட்19 தடுப்பூசியை சிறுவர்களுக்கு செலுத்தி பரிசோதிக்கும் நடவடிக்கையை தற்காலிகமாக நிறுத்தியுள்ளதாக ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

ஐரோப்பிய நாடுகளில் அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசியை செலுத்திக் கொண்ட சிலர் இரத்த உறைவு சிக்கலால் பாதிக்கப்பட்டு உயிரிழந்ததாக வெளியான தகவலை அடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழக பேராசிரியர் ஆண்ட்ரூ பொல்லார்ட் தெரிவித்துள்ளார்.

இந்த விவகாரம் தொடர்பில் பிரிட்டன் மருத்துவம் மற்றும் சுகாதாரப் பொருட்கள் ஒழுங்குமுறை ஆணையத்திடம் கூடுதல் தரவுகளை கேட்டிருப்பதாகவும், அதன் அடிப்படையில் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

பிரிட்டனில் மட்டும் ஒரு கோடியே 80 இலட்சம் பேருக்கு ஆஸ்ட்ராஜெனெகா தடுப்பூசி போடப்பட்ட நிலையில் இரத்தம் உறைவு சிக்கலால் பாதிக்கப்பட்டு 7 பேர் உயிரிழந்துள்ளதாக பிரிட்டன் சுகாதாரத்துறை கடந்த சில நாட்களுக்கு முன்னர் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


Category: உலகம், புதிது
Tags: கொரோனா (COVID-19), உலகம்



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE